![](admin/uploads/.607c08ceaae122.60173579.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடை, இனிப்பு வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு செயல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். அட்மா குழு தலைவர் அசோக்குமார் பங்கேற்று டவுன் பஞ்சாயாத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தள்ளுவண்டி பணியாளர்கள், துய்மை காவலர், உதவியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடை, இனிப்பு வழங்கினார்.
விழாவில் பஞ்., தலைவர் பாப்பு, துணைத்தலைவர் கவிதா, நகர செயலாளர் முருகேசன், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு பரப்புரையாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.