Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளுக்கான மின்கட்டணம் குறைப்பு: இமாச்சல பிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு

பிப்ரவரி 09, 2019 09:05

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணம், யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்படும். விவசாயிகள் தங்கள் பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சோலார் வேலி அமைத்தால், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்காக 5000 பாலிஹவுஸ்கள் அமைக்கப்படும்.  

எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ரூ.11 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.  

பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்வதற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும். அந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் மக்களிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்களே நேரடியாக பேசுவார்கள் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்