![](admin/uploads/.65f14c96a58172.34268093.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: நமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தட்டாங்குட்டை கிராமத்திற்கு உட்பட்ட எம் ஜி ஆர் நகர் பகுதியில் உள்ள ஸ்யூர் டிரஸ்டின் அன்னை இல்லத்தில் சுமார் 40க்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் உள்ளனர்.
ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்தில் உள்ள முதியவர்கள் தீபாவளி கொண்டாடும் வகையில் குமாரபாளையம் தளபதி அரிமா சங்கத்தின் சார்பில் கடந்த 10.11.2023 பத்தாம் தேதி அவர்களுக்கு தேவையான உடைகள் வழங்கப்பட்டன மேலும் தளபதி சங்க நிர்வாகிகள் தங்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும் என்று ஆதரவற்ற முதியவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அரிமா சங்கத்தின் பட்டைய தலைவர் என் ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பசிப்பிணி தலைவர் எஸ்.கே.சண்முகசுந்தரம் மற்றும் சங்கத் தலைவர் மாதேஸ்வரன் செயலர் கதிர்வேல் பொருளாளர் செல்லவேல் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் பரமன்.
பாண்டியன் கான மூர்த்தி மற்றும் பலர் ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடினர் பட்டாசு வெடித்தும் அவர்களுடன் உணவு அருந்தியும் தங்கள் மகிழ்ச்சியை அவர்களுக்கு வெளிப்படுத்தியது ஆதரவற்றோர் இல்லம் திருவிழா கோலம் கண்டு காணப்பட்டது