![](admin/uploads/.62de5559baa3b4.65206229.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை சார்பில் சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வருடாந்திர உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தவசீலன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் இப்பரிசோதனையை மேற்கொண்டனர்.
பரிசோதனை முகாமில் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 80 பேருக்கு முழு உடற் பரிசோதனையும் மாணவ, மாணவியர் 150 பேருக்கு கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உடல் நலத்திற்கான தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. கண் பரிசோதனையில் 11 மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் மேல் சிகிச்சைக்கு 6 மாணவர்களும் பரிந்துரை செய்யப்பட்டனர்.