Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது: 16 கிலோ குட்கா பறிமுதல்

நவம்பர் 21, 2023 11:42

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது செய்து, 16 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் புகையிலைப்போருட்கள் விற்பதாக தகவல் கிடைத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அதில் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஒரு நபர் விற்பது தெரியவந்தது. அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 16 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர் அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இஸ்மாயிலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்