Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு 

நவம்பர் 21, 2023 12:05

பள்ளிபாளையம்: திருச்செங்கோட்டில் மாணவ நேசன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு மட்டும் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற நிலையில், பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு  மாணவி தரணி தேவி பங்கேற்று, மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும் ரூபாய் 5000 ரொக்கப் பரிசும் பெற்றுள்ளார்.

அவருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் எனப்பலர், மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்