Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் புதிய சங்கம் துவக்க விழா

நவம்பர் 25, 2023 11:36

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தண்ணீர் சுத்திகரிப்பு சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் துவக்க விழா நாமக்கல், சேலம் சாலை, ஜேசீஐ ஹாலில் நடைபெற்றது. 

விழாவிற்கு சங்கத்தின் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். துணை தலைவர் கார்த்திக், துணை செயலாளர் கிருஷ்ணசங்கர், ஒருங்கிணை ப்பாளர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் குத்துவிளக்கு ஏற்றி, சங்க பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, வணிகர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் வணிகர் நல வாரியத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விழாவில் பேரமைப்பின் மாவட்ட துணை தலைவர் மோகனூர் நடராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் தேவி உதயகுமார், மோகனூர் சோமசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபால கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராகவன், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ராயல் பத்மநாபன், அமைப்பாளர் மரக்கடை அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விழா ஏற்பாடுகளை சங்க செயற்குழு உறுப்பினர்கள் கோபால்சாமி, கார்த்திகேயன், பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இறுதியாக பொருளாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்