![](admin/uploads/.5d6a5100d20799.98734025.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., அலுவலகம் வளாகத்தில் இ.சேவை மையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு அட்மா குழுத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி, எம்.பி., ராஜேஸ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தங்களின் ஆதார் கார்டு புதுப்பித்தல், பட்டா மாறுதல், வாக்காளர் அட்டை, பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் விண்ணப்பிக்க இ.சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு அட்மா குழு துணைத்தலைவர் தனபாலன், காளப்பநாயக்கன்பட்டி நகர செயலாளர் முருகேசன், டவுன் பஞ்., தலைவர் சித்ரா, துணைத்தலைவர் ரகு, வார்டு கவுன்சிலர்கள் விஜயன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ராமச்சந்திரன், நடுக்கோம்பை பஞ்., தலைவர் விஜயபிரகாஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் பாபு, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் அன்பழகன், இளையராஜா, செந்தில்குமார் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.