Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழிவுநீர் வாய்க்காலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை மனு

நவம்பர் 30, 2023 12:42

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் VKP கடை அருகில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் பள்ளிபாளையம்  நகர மன்ற தலைவர்  மோ.செல்வராஜ், நகர் மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து,நெடுஞ்சாலை சார்பில் தார்ரோடு அமைப்பதற்கு முன்பாக VKP கடை அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ரோட்டின் குறுக்கே உள்ள மழைநீர் கால்வாயை, அகலம் மற்றும் ஆழப்படுத்தி புதுப்பித்த  பிறகு தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  உமா  அவர்களிடம் கூறி கோரிக்கை நிறைவேற்றி தருவதாக நகர்மன்ற தலைவர் ,துணை தலைவர உறுதி அளித்தனர்.

நிகழ்வின் போது பள்ளிபாளையம் நகர மன்ற உறுப்பினர் யுவராஜ்,
நகர திமுக நிர்வாகிகள் ரவி, வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்