Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் 

டிசம்பர் 02, 2023 11:53

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இத்திட்டப்பணிகள் தொடக்க விழா பூமிபூஜையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.

 பச்சுடையாம்பாளையம் ஊராட்சி குள்ளாண்டிக்காடு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் உயர் நிலை நீர் தேக்கத்தொட்டி, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், ஆயில்பட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைத்தல், நாரைக்கிணறு பகுதியில் ரூ.12.61 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டிடம் திறந்து வைத்தார்.

மேலும், மூலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் நடமாடும் நியாய விலைக்கடை தொடங்கி வைத்தல், ரூ.19.97 லட்சம் மதிப்பில் ஏரிக்கரையில் கான்கிரீட் சாலை, தார்சாலை அமைத்தல், ஊனந்தாங்கல் ஊராட்சியில் கரியாம்பட்டி பகுதியில் ரூ.12.61 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு, சின்னவரகூர்கோம்பையில் ரூ.20 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் திறப்பு உள்ளிட்ட பணிகளை இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.

இதில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் கருப்பண்ணன்,
தன்ராஜ், காந்தா, செவ்வந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா சரவணன், கலாராணி செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி, துணை தலைவர்கள் இளையப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் அமுதா, மாவட்ட அணியினர் ஜோதிலட்சுமி சண்முகம், பழனிச்சாமி, ஜெகதீசன், பிரபு, நந்தகுமார், சுரேஷ், மணிகண்டன், ராகவன், திமுக நிர்வாகிகள் பொன்னுவேல்,பச்சமுத்து, சிவராஜ், ராஜா, அஜீத், கேசவன், சீனிவாசன், மணிகண்டன், ரவி, செல்வராஜ், ராஜா, கான்ராக்டர்கள் செக்கடி ஆறுமுகம், ராஜீ, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்