Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்  ஆட்சியர் ச.உமா வழங்கினார்

டிசம்பர் 05, 2023 03:54

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  6 பயனாளிகளுக்கு ரூ.43.05 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 435 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டாப்செட்கோ திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், விபத்து மற்றும் இயற்கை மரணமடைந்த 2 நபர்களின் குடும்பத்தாருக்கு வைப்பு நிதி பத்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

நாமக்கல் நகராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெற்ற சிறுதானிய உணவுத்திருவிழாவில் அரங்கு அமைத்து சிறுதானியம் மூலம் சுவையாக உணவு சமைத்திருந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.  

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்