Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

டிசம்பர் 27, 2023 12:07

குமாரபாளையம்,   டிச. 27: குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுதும் மக்களின் முதல்வர் திட்ட முகாம்  நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் சுந்தரம் திருமண மண்டபத்தில் நடந்த மூன்றாம் நாள்  முகாமில், நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக நகராட்சித் தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமினைத் துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தித் துறை மற்றும் மின்சார வாரியம்,  வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டுவசதித் துறை, சுகாதாரத்துறை  உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.  

தாசில்தார் சண்முகவேல், ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இன்று ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில்  இந்த முகாம் நடைபெறவுள்ளது.

தலைப்புச்செய்திகள்