Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி  மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

டிசம்பர் 27, 2023 12:14

ராசிபுரம் டிச 27:  ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராகும் பொருட்டு   புத்தாக்கப் பயிற்சி  மனநல ஆலோசகர்  டாக்டர் பாபு ரங்கராஜன்   வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி இயக்குனர் பி. சுப்பிரமணியம்,  இயக்குனர்  மணிவண்ணன்,  பள்ளியின் முதல்வர் மோகன் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பயிற்சியின் முடிவில் டாக்டர்  பாபு ரங்கராஜன  மாணவர்களிடையே உரையாடும் பொழுது இறந்தகாலம் என்பது நமது  எதிர்காலத்தை நிர்ணயிப்பது கிடையாது. ஆனால் நிகழ்காலம் நமது எதிர்காலத்தை மிகச் சிறப்பாக தீர்மானிக்கும் என்பதால் தற்பொழுது இருந்து முயற்சி செய்தால் கூட சிறந்த மதிப்பெண்களைப் பெற இயலும் என்பதை மாணவ, மாணவிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்