Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு: வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜனவரி 11, 2024 06:34

புதுக்கோட்டை: அதிமுக அமைச்சரவையில் 8 ஆண்டு காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 10வது முறையாக இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள விஜயபாஸ்கரும் இரண்டாவது குற்றவாளியாக உள்ள அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

இந்நிலையில் இந்த வழக்கை வருகின்ற ஜனவரி 31ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு.

தலைப்புச்செய்திகள்