![](admin/uploads/.612eff1a166b52.82848221.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நெல்லை: தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், [ஜனவரி.12] காலையில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அங்குள்ள அரசு அலுவலர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,சிறப்பித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- "தைத்திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நம்முடைய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய பெருமக்கள், வணிகர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பொங்கல், அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேசுவரன்,
நெல்லை வருவாய் கோட்டாட்சியர் சேக் அய்யூப், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயா உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.