Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது

ஜனவரி 14, 2024 11:06

மதுரை: ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளிக்கு 1.5 ஏக்கர் நிலத்தை  வழங்கிய ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும்  நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுவதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது.

அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள்  கௌரவிக்கப்பட உள்ளார்கள்.

தலைப்புச்செய்திகள்