Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற, பொங்கல் திருவிழா: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

ஜனவரி 14, 2024 11:10

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் அமைந்துள்ள  திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் , ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து,நேற்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.சிலம்பரசன் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில், கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட  ஆயுதப்படை காவலர்களுக்கு, உறியடி (பானை உடைத்தல்) உள்ளிட்ட பல்வேறு  விளையாட்டு போட்டிகளில்  மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று  வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார். 

அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் அருமை,பெருமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றினார். 

அப்போது  அவர் கூறியதாவது,ஆயுதப்படை மைதானத்தில்  உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை நான் கொண்டாடுவது எனக்கு  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கல் விழாவானது  சாதி,மத, இனப்பேதமின்றி அனைத்து சமுதாயத்தினராலும் பெரிதும் விரும்பிக் கொண்டாடப்படும்  ஒரு முக்கியமான பண்டிகை. 

அனைத்து காவலர்களுக்கும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய இனிய, இதயம் நிறைந்த, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்