Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிளாம்பாக்கம்  காவல் நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் தாமோஅன்பரசன்

பிப்ரவரி 06, 2024 04:04

செங்கல்பட்டு,:  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக அமைய உள்ள காவல் நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் தாமோஅன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறு வியாபாரிகள் கடை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர் அவர்களது கோரிக்கை பரிசீலித்து அவர்களுக்கு ஏற்ற இடம் அமைத்து தர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல் ஏடிஎம் மையங்கள் அமைக்க வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது ஓரிரு தினங்களில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்துகள்  இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் அதே போல் நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

விசாரணை அடுத்த வாரம் இறுதி கட்டத்தை அடையும் என்று தெரிவித்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் 15 பேர் மட்டுமே உரிமையாளர்கள் கடை வைத்துள்ளனர் மீதமுள்ள கடைகள் குத்தகைக்கு விடப்பட்டு பயன்பாட்டிற்கு இருந்ததாக தெரிகிறது அவர்களுக்கான கடை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்