Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர்   கூட்டமைப்பு கூட்டத்தில்  தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

மே 30, 2024 01:22

துபாய், மே.30: துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தகர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு டீபா அமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார். 

புஜேரா அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் முகம்மது பின் சொரூர் அல் சர்கி, தென் ஆப்பிரிக்க துணை தூதர் ஆண்ட்ரூ செபோ லெபோனா, துபாய் சுங்கத்துறை அதிகாரி ஹுசைன் அல் பர்தான் ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், டி.ஆர்.ஐ. குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் முரளி, ஜூனிய குப்பண்ணா ரெஸ்டாரண்டின் செயல் இயக்குநர் ஆர். பாலசந்தர், தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரான், இந்தோ - யுஏஇ வர்த்தக சபையின் நிறுவன தலைவர் ஸ்ரீதேவி அருணாசலம், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், அன்வர் பிசினஸ்மேன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 
தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரிய வளைகுடா உறுப்பினர் எஸ்.எஸ்.மீரான் பேசும் போது அயலகத் தமிழர்கள் வாரியத்தின் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றார். 

அதனை தொடர்ந்து டாக்டர் பால் பிரபாகர் டீபா அமைப்பின் உறுப்பினர்கள் தங்களது நிறுவன ஊழியர்களை அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் இத்தகைய நல திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். விழாவில் பின் சைபான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். சந்திரசேகரனுக்கு டீபா அமுதசுரபி விருதும், எஸ். மிராகிள் லவுலிக்கு டீபா வழிகாட்டி விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட வர்த்தக பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தலைப்புச்செய்திகள்