Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குருக்கள்பட்டியில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா

ஜுலை 31, 2024 10:04

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கே.வி. பெரியதுரை தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணைத் தலைவர் வேலுச்சாமி, செயற்பொறியாளர் அப்பாதுரை, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா சசிகுமார், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரிய லூயிஸ் பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகையா பாண்டியன், செந்தூர் பாண்டியன், சுகுமாரன் பாபு, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பழனிவேல் முருகன், இளைஞர் அணி சுபாஷ் சந்திரபோஸ், வீரா, ஒப்பந்ததாரர் காசி பாண்டியன், கிளைக் கழக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சண்முகையா, செல்லத்துரை, பாலசுப்பிரமணியன், பூசை பாண்டியன், குருசாமி, ராமர் பாண்டியன், முத்துக்குட்டி, மாரியப்பன், ராஜ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்