Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கராபுரம் பேரூர் கழகம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

செப்டம்பர் 11, 2024 04:58

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் கழகம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,பேரூர் கழக அவைத்தலைவர் ரவி தலைமை தாங்கினார்,

பேரூர் கழக செயலாளர் துரை தாகபிள்ளை அனைவரையும் வரவேற்றார், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ந.ஆறுமுகம்,ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கமரூதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்பி உரையாற்றினார், ஆலோசனை கூட்டத்திற்கு வந்த மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களுக்கு ஒன்றிய கழக பிரநிதி சக்தி மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர் பரிதா ஆகியோர் வீரவாள் பரிசளித்தனர்,

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி தயாளன், ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் முருகன், செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் பால. அண்ணாமலை, பிரபாகர்,ரமேஷ், குமார்,கோவிந்தன், இம்தியாஸ்,லட்சுமி, ஹரி,சிவக்குமார், ஏழுமலை,கிருபா, பாலு,பரிதா சக்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்