Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
உளுந்தூர்பேட்டை செப்டம்பர் 13: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக்கூட்டம்உளுந்தூர்பேட்டை சட்டமன்ற திமுக அலுவலகத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவரும், தமிழ்நாடு கால்நடை ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆ.ஜெ. மணிக்கண்ணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்து பேசுகையில், பவள விழா நிறைவு மற்றும் திமுக முப்பெரும் விழா முன்னிட்டு அனைவரது வீடுகள் தோறும் நம் இருவண்ணக்கொடி ஏற்றிடவும், திமுக கொடிக்கம்பம் புதுபித்து திமுக கொடியினை ஏற்றி ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கி சிறப்பாக கொண்டாடுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார், அனைவருக்கும் திமுக கொடி வழங்கி சிறப்பித்தார், இக்கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி ஊராட்சி மன்ற தலைவர்,கிளை திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.