Wednesday, 16th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட விண்ணப்ப முகாம் துவக்கபட்டது

செப்டம்பர் 13, 2024 05:08

மணலூர்பேட்டை செப்.13: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட மணலூர்பேட்டை பேரூராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப முகாமினை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் க.கார்த்திகேயன் எம்.எல்.ஏ துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டார். 
       மேலும் வசந்தம் க.கார்த்திகேயன் எம்.எல்.ஏ பொதுமக்களிடம் தெரிவிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நமது திராவிட மாடல் அரசு மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன், அதன் முதல் கட்டமாக மணலூர்பேட்டை பேரூராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விண்ணப்ப முகாமினை நான் இன்றைய தினம் துவக்கி வைத்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டேன் ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பான திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் ஜெய் கணேஷ்,பேரூராட்சி மன்றத் தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், திமுக நிர்வாகிகள் தெய்வசிகாமணி, ஆ.மாணிக்கம்,  அம்மு ரவிச்சந்திரன், அன்வர் பாட்ஷா, பாலாஜி பூபதி, சையத் அலி, அண்ணாதுரை, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்