Wednesday, 16th October 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர் மாவட்டம் செப் 13: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நா.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், கணியாம்பூண்டி இந்திய மருத்துவக் கழகம். மரு.முருகநாதன் அரங்கத்தில் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சியை பார்வையிட்டார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம் ,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், இந்திய மருத்துவக் கழகத் தலைவர் மரு. பாண்டியராஜன், திருப்பூர் தமிழ்ச்சங்க செயலாளர் மோகன் கார்த்தி, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பெ.இளங்கோ நாட்டுப்புற நல வாரியம் நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி சி. கலாராணி ஆகியோர் உள்ளனர்.