Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு முழுவதும் பாரதிய ஜனதா முன்னிலை, தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை

மே 23, 2019 04:35

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும்  சந்தித்தன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள்  எண்ணும் பணி தொடங்கியது.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு  ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

முதல் கட்டமாக பாரதீயஜனதா 115 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40  தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மெகா கூட்டணி 5 தொகுதிகளிலும், மற்ரவர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், மதுராவில் ஹேமமாலினியும் முன்னிலை வகிக்கின்றனர்.

* லக்னோ மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை. 

* நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் முன்னிலை.

* பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் முன்னிலை.

* காஞ்சிபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை.

தலைப்புச்செய்திகள்