Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திர சட்டமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை

மே 23, 2019 04:48

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

முதல் 1 மணி நேரத்தில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், 5-ல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

தலைப்புச்செய்திகள்