Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தர பிரதேசத்தில் காங்.பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று ராஜ்பப்பர் ராஜினாமா

மே 24, 2019 09:13

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 64 இடத்தை வென்றன. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் 15 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி  தொகுதியில் மட்டுமே வென்றது. 

அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், படுதோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜ்பப்பர் அறிவித்துள்ளார்.  தனது ராஜினாமா கடிதத்தையும் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ளார். 

முன்னதாக, தேர்தல் முடிவுகள் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு வேதனை அளிப்பதாகவும். எனது பொறுப்பை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என குற்ற உணர்ச்சி தனக்கு இருப்பதாகவும் ராஜ்பப்பர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். 
 

தலைப்புச்செய்திகள்