Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தினத்தந்தி’ நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி, சென்னை எழும்பூர் சி.பா.ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அவரது மூத்த மகனும், ‘மாலைமலர்’ இயக்குனருமான பா.சிவந்தி ஆதித்தன், இளைய மகனும், தந்தி டி.வி. இயக்குனருமான பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், மலர்மன்னன், நடிகர் ஜெ.எம்.பஷீர், வி.எஸ்.வேல் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள்.