Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரசிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் விலக சச்சின் பைலட் முடிவு

மே 29, 2019 10:03

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 2 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.

இந்நிலையில் ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினால் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் விலகி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக எல்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சச்சின் பைலட் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்