Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்களுக்கு பிரதமர் வீட்டில் தேனீர் விருந்து

மே 30, 2019 01:00

புதுடெல்லி: மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களுக்கு பிரதமர் மோடி தனது வீட்டில் தேனீர் விருந்து அளித்தார். பிரதமர் வீட்டிற்கு மத்திய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்க உள்ளவர்கள் வருகை தந்துள்ளனர்.

தேநீர் விருந்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றுள்ளார். ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி, நிர்மலா சீதாராமன், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார் என்கிற அனுமானத் தகவல் வெளியாகியுள்ளது

உத்தேசப் பட்டியல் விவரம் வருமாறு:-

சதானந்தா கவுடா 
பியூஷ் கோயல் 
ரவி ஷங்கர் பிரசாத் 
ஜிஜேந்திர சிங் 
பபுல் சுப்ரியோ 
கிஷான் ரெட்டி
ஸ்மிருதி இரானி 
சந்தோஷ் கங்வார் 
சுரேஷ் அங்காடி 
பிரகாஷ் ஜவடேகர் 
ராஜ்நாத் சிங்
அர்ஜூன் ராம் மேக்வால்
நிர்மலா சீதாராமன் 
ரா இந்தர்ஜித் சிங் 
பர்ஷோத்தம் ரூபலா 
மன்சுக் மந்தாவியா
கிரண் ரிஜிஜு 

அ.தி.மு.க. சார்பில் ஒ.பி.ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஆர்.சி.பி.சிங், லோக் ஜனசக்தி சார்பில் ராம்விலாஸ் பஸ்வான், அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் பாதல் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்