Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து என தகவல்

மே 31, 2019 05:33

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜகவை எதிர்த்த கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டத்தில், ஜூன் 6 -ல் தொடங்க இருப்பதாக கூறப்படும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் ஆலோசிப்பதாக இருந்தது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்காததால்,  இன்று மாலை நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின.

தலைப்புச்செய்திகள்