Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மே 31, 2019 10:12

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான ஆட்சியில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழாவில் 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில்,  பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று சந்தித்தார்.   

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்றது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது  குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, மொரிசியஸ் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்

தலைப்புச்செய்திகள்