Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார் உரிமையாளர் தற்கொலை : டி.எஸ்.பி., ஆய்வாளர்கள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம்

மே 31, 2019 11:56

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் தான் மேல் வாடகை அடிப்படையில் நடத்தி வந்த கடையின் உரிமையாளர் ஆனந்தன் வாடகையை தொடர்ந்து உயர்த்தியதாலும், போலீசார் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாலும் நிதி நெருக்கடியில் சிக்கியதாக நெல்லையப்பன் வாக்குமூலம் அளித்துவிட்டு தற்கொலை செய்தார்.

இதையடுத்து கடையின் உரிமையாளர் ஆனந்தன், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜூ, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்புராஜூ மற்றும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லையப்பன் தீக்குளித்து இறந்த வழக்கில் மெத்தனம் காட்டியதாக மாமல்லபுரம் ஆய்வாளர் ரவிக்குமார் காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், துணை ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆயுதப்படை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்