Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீரங்கம் கோவிலில் செல்போனுக்கு தடை

மே 31, 2019 11:58

ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கோவில் என்பதால், ஆராய்ச்சியாளர்கள்,வெளிநாட்டவர்கள் வருகையும் அதிகளவில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்