![](admin/uploads/.60768116376787.82563215.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த பிரகாஷ் பஸ் மோதி உயிரிழந்தார். அவிநாசி கருவலூர்கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் வேணுகோபால் உயிரிழந்தார். ராசிபுரம் பெரம்பஞ்சோலையை சேர்ந்த சந்திரன் கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து உயிரிழந்தார்.
வேதாரண்யம் வாய்மேடு கிராமத்தை சேர்ந்த காசியம்மாள் வீட்டு கூரை இடிந்து உயிரிழந்தார். முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்த ராம்ஜிநகர் கீர்த்திகா, குஜிலியம்பாறை ஹரிஹர தீபக் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
துறையூர் புத்தூர் அரசு பழங்குடியினர் பள்ளி மாணவிகள் பிரியதர்ஷினி, சிந்துஜா இருவரும் குட்டையில் கைகழுவ சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்செந்தூர் புன்னக்காயலை சேர்ந்த ஜேசுராஜ் கோவில் திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன் இவர்களது குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.