Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 227 பெண்கள் விடுதிகள் மூடப்பட்டன

ஜுன் 05, 2019 01:56

சென்னை:  தனியார் நடத்தும் இந்த விடுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் கிடையாது. தீ தடுப்பு சாதனங்கள், அவசர கால வழிகள் எதுவும் இங்கு கிடையாது. வீடுகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் விடுதிகளாக நடத்தி வரும் அதன் உரிமையாளர்கள் அடிப்படை வசதிகளை கூட அங்கு செய்து கொடுக்கவில்லை.

சுகாதாரமற்ற சமையல் கூடம், சுத்தம் இல்லாத கழிப்பறைகள், காற்றோட்டம் இல்லாத அறைகள் என பல்வேறு குறைபாடுகளுடன் விடுதிகள் செயல்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அனுமதியின்றி இயங்கும் பெண்கள் விடுதிகளை கணக்கெடுக்க கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார். உரிமம் பெறாத விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து 1050 விடுதி நிர்வாகிகள் அனுமதிகோரி விண்ணப்பித்தனர். இதில் 7 மகளிர் விடுதிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 5 விடுதிகள் மூடப்பட்டன. 127 விடுதிகளுக்கு கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது. இதுதவிர 227 பெண்கள் விடுதிகள் அனுமதியின்றி சென்னைக்குள் இயங்கி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவை வருமாறு:-

மயிலாப்பூரில் 18 விடுதிகள், வேளச்சேரியில்-20, சோழிங்கநல்லூர்-79, அயனாவரம்-3, ஆலந்தூர்-16, பெரம்பூர்-5, மதுரவாயல்-17, கிண்டி-23, தண்டையார்பேட்டை-6, மாம்பலம்-15, அமிஞ்சிகரை-9, புரசைவாக்கம்-13, எழும்பூர்-3. இந்த விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் தண்ணீர், மின் இணைப்புகளை துண்டித்து விடுதிகள் செயல்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்