![](admin/uploads/.616ab5531f9c86.40864078.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு இன்று முதல் அதிக அளவில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து இன்று கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன், அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.