Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அகிம்சை வழியில் அறவழிப்போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து அந்த சங்கத்தின் கூறியதாவது: இந்த போராட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் உடனடியாக யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து நடைபெற்றது.
போராட்டம் முடிந்தவுடன் கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனையும் சந்தித்து உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் யோகா ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி மனு கொடுத்தோம்.
அந்த மனுவை உடனே படித்துவிட்டு கூடிய விரைவில் யோகா ஆசிரியரை நியமிக்க வழி வகை செய்கிறோம் என்று உறுதி கொடுத்துள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் தமிழக முதலமைச்சரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளோம் கூடிய விரைவில் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் அனைவரும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் தமிழ் நாட்டில் உள்ள யோகா ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூடியவிரைவில் நமக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு கிடைக்கும் மகிழ்ச்சியுடன் என்பதைதெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே தாங்கள் எந்த யோகா சங்கத்தில் இருந்தாலும் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்திற்கு வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கவும் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இச்சங்கம் மென்மேலும் பாடுபடும். யாருக்கும் எதற்கும் அடிபணியாமல் தமிழ்நாட்டில் உள்ள யோகா ஆசிரியர்கள் சங்கம் குரல் கொடுக்கும் என்தை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார்கள்.