![](admin/uploads/.64d9c464215029.75775777.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அடகு கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று பிற்பகல் 3 மணி அளவில் பாஸ்கரின் தாயார் வீட்டினை பூட்டிக்கொண்டு மோட்டார் பாக்ஸ் அருகே சாவியை வைத்துவிட்டு நிலத்திற்கு சென்றுவிட்டார்.
வந்து பார்த்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்று பிரோவை உடைத்து அதில் இருந்து 50 சவரன் தங்க நகை 5 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இது குறித்து வானாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.