![](admin/uploads/.5ffd9156c0f4f4.76073453.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சியில் இன்று அமமுக சார்பில் திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை ஏற்பட தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை எடுக்காததே காரணம்.
எங்களை லெட்டர் பேடு கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார்.தனது சொந்த தொகுதியிலேயே டெபாசிட் வாங்க முடியாத ஜெயக்குமார் எங்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அ.தி.மு.க.விற்கு எங்கள் கட்சியினரை பதவி ஆசை காட்டி இழுக்கிறார்கள். அங்கு சென்றவர்கள் எங்களிடத்தில் மீண்டும் திரும்புவார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சியினருடன் கூட்டணி அமைத்தோ, அல்லது தணித்தோ போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.