![](admin/uploads/.63e0b26cd5e013.81850475.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் சாக்கோட்டை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது சகோதரர்கள் மூன்று பேரும் சத்தியநாதன் வாட்டர் சர்வீஸ் சக்தி டீசல் ஒர்க் ஷாப் மூர்த்தி டீசல் ஒர்க் ஷாப் மூன்று பேரும் தனித்தனியாக கடை வைத்துள்ளனர்.
நேற்று இரவு எப்பொழுதும் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மின்கசிவு ஏற்பட்டு மூன்று கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின கடையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து சர்வீஸ்க்காக வந்த ஒரு லாரி ஆறுமுகத்தின் சொந்த சிறிய வேன் உள்ளிட்டவையும் தீயில் எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு 2 தீயணைப்பு வாகனங்கள் வந்த மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர். தீயணைப்பு அலுவலர் முத்து குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.