Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலி எப்போதும் பாய்வதற்கு தான் பதுங்கும். ஓடி ஒழிவதற்கு பதுங்காது: தமிழிசை கிண்டல்

ஜுலை 01, 2019 06:13

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து இருந்தது. ஆனால் அதை இப்போது வற்புறுத்தப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திடீரென்று தி.மு.க. பின்வாங்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க திட்டமிட்டார்கள். அதற்காகத்தான் தீர்மானத்தை கொடுத்தோம். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து விட்டு தி.மு.க. பதுங்குகிறது என்கிறார்கள். புலி எப்போதும் பாய்வதற்கு தான் பதுங்கும். ஓடி ஒழிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம் என்றார்.

மு.க.ஸ்டாலினின் இந்த கருத்தை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல் செய்துள்ளார். அவர் கூறியதாவது:- புலி பதுங்குவது பாயத் தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும் அது பூனையாக அல்லவா உள்ளது. தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளை அனுபவிக்கிறார்கள். ஸ்டாலின் தன் மீதே ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்