Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

30 ராணுவ வீரர்களை கொண்ட மதுரை பள்ளக்காபட்டி கிராமம்

பிப்ரவரி 17, 2019 08:41

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது பள்ளக்காபட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்ற ராணுவவீரர் பனிச்சரிவில் சிக்கி இறந்தார். அவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் 30 இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.  

மேலும் 20 பேர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இக்கிராமத்தை சேர்ந்த சுந்தரபாண்டிதான் முதன்முதலாக ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறையில் ஊருக்கு வரும்போது கிராமத்து இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர பயிற்சி அளித்தார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது பனிச்சரிவில் சிக்கி இறந்தார்.  

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளில் அவரிடம் பயிற்சி பெற்ற 30க்கும் மேற்பட்டோர் ராணுவ பணியில் சேர்ந்துள்ளனர். இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து கூறும்போதும்,  எங்கள் கிராமத்தை சேர்ந்த பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுந்தரபாண்டி தான் இவர்களுக்கு முன்னுாதரணமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் இக்கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் ராணுவ பணியில் இருப்பார் என்ற நிலை உருவாகி விடும் என்று கூறுகிறார்கள். 

தலைப்புச்செய்திகள்