![](admin/uploads/.5d5013cf826a54.18403715.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை : மதுரை மாவட்டம் காடுபட்டி மண்ணாடிமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகலட்சுமி. தேனி அல்லிநகரம் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் தற்போது விடுப்பில் உள்ளார். சண்முகலட்சுமி வெளியூரில் பணியாற்றியபோது அவரது குழந்தையை தாயார் தெய்வராணி காடுபட்டியில் வைத்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தனது குழந்தையை வளர்க்கும் தாய்க்கு உதவுவதற்காக தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த 11 வயது இஸ்லாமிய சிறுமியை சட்டவிரோதமாக தத்ததெடுத்ததாகக் கூறப்படுகிறது. தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைல்டு லைனுக்கு ஆன்லைன் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற சைல்டு லைன் அதிகாரிகள் சண்முகலட்சுமியால் மிரட்டி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை குழந்தைகள் நல கமிட்டிக்கு அவர்கள் கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் உதவியுடன் காடுபட்டிக்குச் சென்ற குழந்தைகள் நல கமிட்டியினர் சம்மந்தப்பட்ட சிறுமியை மீட்டனர். சிறுமி கொடுமைபடுத்தப்பட்டது தொடர்பாக சண்முகலட்சுமியை, தொடர்பு கொண்டு கேட்ட போது, 'குழந்தையை தத்தெடுத்ததில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை எனவும்; ஏழ்மையில் இருந்த குழந்தையை தமது தாய் எடுத்து வளர்த்ததாக விளக்கமளித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி மதுரை முத்துப்பட்டியில் உள்ள தனியார் காப்பாகத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாரிஸ்வரி அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகலட்சிமியின் தாயார் தெய்வராணி மீது, குழந்தையைக் கொடுமைப்படுத்தியது, ஊமை காயம் ஏற்படும் வகையில் தாக்கியது, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமி குறைந்த விலைக்கு கொத்தடிமையாக விற்கப்பட்டதாக புகார் இருப்பதால் அது தொடர்பாக சம்மந்தப்பட்ட சிறுமியின் உறவினர்களிடத்தில் குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.