Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசியம் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

ஜுலை 08, 2019 10:30

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதனை ஜெ.தீபாவும், தீபக்கும் எதிர்த்தனர்.

இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து கூறுகையில், மக்களின் வரிப்பணத்தில் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற அவசியம் என்ன என்றும், அவரது புகழை பரப்ப பல்வேறு வழிகள் இருக்கும் போது இத்தனை கோடி செலவில் நினைவிடம் அமைப்பதில் ஆட்சேபனை தெரிவித்தது சென்னை உயர்நீதி மன்றம்.
 

தலைப்புச்செய்திகள்