Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை

ஜுலை 08, 2019 01:24

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் பகுதியில் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மைத்துனரே இச்செயலை செய்ததாக கூறப்படுகிறது. 

குடும்பத்தகராறு காரணமாக இது நடந்துள்ளது எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்தவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்