Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடரும் போலி டாக்டர்கள்- மகனுடன் கைது

ஜுலை 08, 2019 01:51

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே போலி பெண் மருத்துவர் மற்றும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிணத்துக்கடவு அருகில் உள்ள வடசித்துாரில், கடந்த ஏப்ரல் 24 அன்று மெட்டுவாவியை சேர்ந்த வனிதாமணி என்பவருக்கு, வடசித்துார் ஆயுர்வேத கிளினிக் நடத்தும் முத்துலட்சுமி என்பவர் மருத்துவம் பார்த்துள்ளார். 

வனிதாமணிக்கு பிரசவம் பார்த்து, தவறான சிகிச்சை அளித்தார் என்று முத்துலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோவை மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் பானுமதி மற்றும் கிருஷ்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ( ஜூலை 8) போலி மருத்துவரான முத்துலட்சுமி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், போலி மருத்துவர் என்று முத்துலட்சுமியும், அவரது மகன் கார்த்திகேயனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த கைது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 


 

தலைப்புச்செய்திகள்