Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: சசிகலா புஷ்பா மனு

ஜுலை 11, 2019 10:06

புதுடெல்லி: 2009-ல் திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால் வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். 23 ஆண்டுகளுக்குப்பின் வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைகிறார்.

இந்நிலையில்  சசிகலா புஷ்பா எம்.பி. ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்