Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவள்ளூர் அருகே பெண்களிடம் செயின் பறித்த கல்லூரி மாணவர்கள்

ஜுலை 13, 2019 05:23

சென்னை: திருவள்ளூர் அருகே பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோட முயன்ற 2 கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து கடுமையாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வாணை. இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், தெய்வாணை அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாய்ந்ததில், இருவரும் கீழே விழுந்தனர். 

இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், இருவரையும் கடுமையாக தாக்கியதுடன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், அவர்களது பெயர் பிரசாத், மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்