![](admin/uploads/.5c4317208eac61.87591823.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரியாக வேலை பார்ப்பவர் மாணிக்கியாராவ். ராத்திரி நேரம் ஆகி விட்டால், ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்தில் மாணிக்கியாராவ் பெண்களுடன் ஜாலியாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அதிரடியாக களம் இறங்கி, கையும் களவுமாக அதிகாரியை பிடிக்க போலீசார் திட்டம் போட்டனர். இதற்காக செய்தியாளர்களுடன் ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்திற்கு ராத்திரி நேரத்தில் சென்றனர். அந்த சமயத்தில் மாணிக்கியாராவ் ரொம்ப பிஸியாக இருந்திருக்கிறார். ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக வேலை செய்யும் லட்சுமியை தன் ஆபீசுக்கு வரவழைத்து, உல்லாசத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
அப்போது, போலீசையும், செய்தியாளர்களையும் பார்த்துவிட்ட அதிகாரிக்கு ஒரு செகண்ட் ஒன்றுமே புரியவில்லை. பதட்டமடைந்த அதிகாரி, லட்சுமியை தன் அலுவலக கட்டிடத்தின் மேல் ஏற்றி, அங்கேயே பதுக்கியும் வைத்தார்.
போலீசார் விடுவார்களா என்ன.. பில்டிங் மேலே ஏறி போய் தேடி பார்த்து, பதுங்கி கிடந்த லட்சுமியை கீழே இறக்கி அழைத்து வந்தனர். நடந்த சம்பவம் பற்றி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவலும் அளித்தனர். சம்பவங்கள் அனைத்தையும் செய்தியாளர் படம் பிடித்தனர். வசமாக மாட்டிக் கொண்ட மாணிக்கியாராவ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.இது சம்பந்தப்பட்ட செய்திகளும் போட்டோக்களும்தான் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கின்றன.